வீரட்டானேஸ்வரர் கோவிலில் நடராஜருக்கு மகா அபிஷேகம்

வீரட்டானேஸ்வரர் கோவிலில் நடராஜருக்கு மகா அபிஷேகம்

 கோவில்களில் நடராஜருக்கு மகா அபிஷேகம்

வீரட்டானேஸ்வரர் கோவிலில் சித்திரை திருவோணத்தை முன்னிட்டு நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் நடைப்பெற்றது.
திருக்கோவிலூர் கீழையூரில் உள்ள சிவானந்தவல்லி உட னுறை வீரட்டானேஸ்வரர் கோவிலில் சித்திரை திருவோணத்தை முன்னிட்டு நடராஜ ருக்கு சிறப்பு அபிஷேகம் நடை பெற்றது. இதையொட்டி சாமிக்கு சிறப்பு பூஜை செய்து, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து நடராஜருக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது. இதில் திருக்கோவிலூர் மற்றும் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதேபோல், அரகண்டநல்லூரில் உள்ள சவுந்தர்ய கனகாம்பிகை உடனுறை ஸ்ரீ அதுல்ய நாதேஸ்வரர் கோவிலிலும், ஸ்ரீ நடராஜருக்கு சித்திரை திருவோணத்தை முன்னிட்டு மகாஅ பிஷேகம் செய்யப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் முக்கியஸ்தர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் செய்திருந்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story