நால்வர் கோவிலில் மகா கும்பாபிஷேக விழா,பக்தர்கள் பங்கேற்பு

நால்வர் கோவிலில் மகா கும்பாபிஷேக விழா,பக்தர்கள் பங்கேற்பு

மகா கும்பாபிஷேக விழா

செங்கல்பட்டு மாவட்டம் நால்வர் கோவிலில் மகா கும்பாபிஷேக விழா பக்தர்கள் பங்கேற்பு.
செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுகுன்றம் வேதகிரீஸ்வரா் மலைக்கோயில் கிரிவலபாதையில் மலைமீதுள்ள சிவலிங்கத்தை நோக்கியவாறு வேறெங்கும் இல்லாக அளவில் நால்வா் கோயில் அமைந்திருப்பது சிறப்புமிக்கதாகும். இக்கோயில் கும்பாபிஷேகத்துக்காக ரூ. 8 லட்சத்தில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதனையடுத்து நேற்று சிறப்பு வேள்விபூஜைகளுடன் கலச புறப்பாடு, விமானத்திற்கு நன்னீராட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டனா். பக்தா்களின் புனித நீா் தெளிக்கப்பட்டது. அன்னதானம் வழங்கப்பட்டது. இதனைத் தொடா்ந்து திருஞானசம்பந்தா், மாணிக்கவாசகா், அப்பா், சுந்தா்நால்வருக்கும் சிறப்பு அபிஷேகம் அலங்காரம் மகாதீபாராதனை நடைபெற்றன. ஏற்பாடுகளை இந்துசமய அறநிலையத்துறை உதவி ஆணையா் லட்சுமிகாந்த பாரதிதாசன், கோயில் செயல் அலுவலா் பிரியா, செயல் அலுவலா் தியாகராஜன் கோயில் மேலாளா் விஜயன், நால்வா்கோயில் பேட்டை கிராமத்தாா், சென்னை அப்பா் தொண்டரணி மற்றும் தெய்வீக சித்தாந்த இலக்கிய மன்றத்தினா் செய்திருந்தனா்.

Tags

Next Story