ஊத்துக்கரைப்பட்டி செல்வ விநாயகர் கோவிலில் மகா கும்பாபிஷேக விழா

ஊத்துக்கரைப்பட்டியில் செல்வ விநாயகர் கோவிலில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

கரூர் மாவட்டம், புலியூர் பேரூராட்சிக்குட்பட்ட, ஊத்துக்கரைப்பட்டியில் அமர்ந்து அருள் பாலித்து வரும் அருள்மிகு செல்வ விநாயகர் ஆலயம் புதுப்பிக்கப்பட்டு இன்று கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, யாக வேள்வியில் வேத மந்திரங்கள் முழங்க, பூஜிக்கப்பட்ட புனித நீரை எடுத்து கோவில் கலசத்தில் ஊற்றி கும்பாபிஷேக விழாவை சிவாச்சாரியார்கள் நடத்தினர். ஊர் கொத்துக்காரர் தலைமையில் நடைபெற்ற இந்த கும்பாபிஷேக விழாவில், சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள், பக்தர்கள் கலந்து கொண்டு, சுவாமி தரிசனம் செய்து, கும்பாபிஷேக விழாவை சிறப்பித்தனர். விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் கும்பாபிஷேக விழா கமிட்டியினர் அன்னதானம் வழங்கினர்.

Tags

Next Story