வெள்ள கவுண்டம்பட்டியில் ஸ்ரீ பகவதி அம்மன் ஆலயத்தில் மகா கும்பாபிஷேக விழா !

வெள்ள கவுண்டம்பட்டியில் ஸ்ரீ பகவதி அம்மன் ஆலயத்தில் மகா கும்பாபிஷேக விழா !

ஸ்ரீ பகவதி அம்மன் ஆலயம்

வெள்ள கவுண்டம்பட்டியில் ஸ்ரீ பகவதி அம்மன் ஆலயத்தில் மகா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
வெள்ள கவுண்டம்பட்டியில் ஸ்ரீ பகவதி அம்மன் ஆலயத்தில் மகா கும்பாபிஷேக விழா. கரூர் மாவட்டம், மூக்கனாங்குறிச்சி ஊராட்சியில் உள்ள வெள்ளக் கவுண்டம்பட்டியில் அமர்ந்து அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ செல்வவிநாயகர், அருள்மிகு ஸ்ரீ பகவதி அம்மன் ஆலயம் புதுப்பிக்கப்பட்டு கும்பாபிஷேக விழா இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. கும்பாபிஷேக விழா இன்று அதிகாலை மங்கல இசையுடன் துவங்கியது. பின்னர் விநாயகர் வழிபாடு, புன்யாகம், பிம்பசுத்தி, ஸ்பர்சாகுதி, நாடி சந்தானம், இரண்டாம் கால யாக பூஜை உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடைபெற்று, யாக வேள்வியில் பூஜிக்கப்பட்ட புனித நீரை எடுத்துச் சென்று, கோவில் கோபுர கலசத்தில் ஊற்றி கும்பாபிஷேக விழாவை வெகு விமர்சையாக சிவாச்சாரியார்கள் நடத்தினர். பின்னர் மூலவருக்கு மகா தீபாரணையும் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மூக்கணாங்குறிச்சி ஊராட்சி சுற்று வட்டார பகுதியைச் சேர்ந்த ஊர் முக்கியஸ்தர்கள், பொதுமக்கள், பக்தர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு கும்பாபிஷேக விழாவை சிறப்பித்தனர். நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் அன்னதானமும் வழங்கப்பட்டது.

Tags

Next Story