தீயில் மாண்ட குட்டையம்மன் கோவிலில் மகா கும்பாபிஷேகம்

கழுகூர் குளத்துக்கரையில் எழுந்தருளியுள்ள தீயில் மாண்ட குட்டையம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா விமரிசையாக நடந்தது.

கரூர் மாவட்டம், கழுகூர் ஊராட்சியில் உள்ள கழுகூர் குளத்துக்கரையில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ தீயில் மாண்ட குட்டையம்மன் ஆலய மகா கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது.

புனரமைக்கப்பட்ட இந்த கோவிலில், இன்று நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில், நாகனூர் சேர்ந்த குடிப்பாட்டுக்காரர்களும், கழுகூரைச் சேர்ந்த குடிப்பாட்டுக்காரர்கள், பங்காளிகள், மாமன், மைத்துனர்கள், உறவினர்கள் மற்றும் இரண்டு ஊர்களைச் சேர்ந்த பொதுமக்கள் என ஏராளமான கலந்து கொண்டனர். கும்பாபிஷேக விழா முடிந்ததும் மகா தீபாராதணை நடைபெற்றது. அப்போது அனைத்து பொது மக்களும் பயபக்தியுடன் தங்கள் குடிப்பாட்டு சாமியை மனம் உருகி வேண்டிக் கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags

Next Story