வரதராஜப்பெருமாள் கோவிலில் மகா கும்பாபிஷேகம்

கும்மிடிப்பூண்டி ஒன்றியம் கண்ளூர் வரதராஜப்பெருமாள் கோவிலில் கும்பாபிஷேக விழா விமரிசையாக நடந்தது.
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி ஒன்றியம் கண்ளூர் கிராமத்தில் ஸ்ரீ தேவி பூதேவி சமேத ஶ்ரீ வரதராஜப்பெருமாள் திருக்கோவில் மகா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது விடியற்காலை சிலை பிரதிஷ்டை, அஷ்டபந்தனம் சாற்றுதல் அதன் பின்னர் நாடி சந்தன பூஜை , ஹோமம், மஹா பூர்ணாஹுதி ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்று பின்னர் கலசம் புறப்பட்டு காலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்ட மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது பின்னர் அன்னதானம் திருக்கல்யாண உற்சவ வைபோகம் வானவேடிக்கையுடன் சுவாமி வீதி உலாவும் நடைபெற்றது இதில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story