திருவாலங்காடு : மகா கும்பாபிஷேகவிழா

திருவாலங்காடு :  மகா கும்பாபிஷேகவிழா

கும்பாபிஷேகம்

திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு பத்ரகாளி அம்மன் திருக்கோயிலில் மற்றும் வினை தீர்த்த விநாயகர் கோயிலில் நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் ஏராளமான் பக்தர்கள் கலந்து கொண்டனர்.
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருள்மிகு சுப்பிரமணியசாமி திருக்கோயில் உடன் இணைந்த திருவாலங்காடு பத்ரகாளி அம்மன் திருக்கோயிலில் மற்றும் வினை தீர்த்த விநாயகர் கோயிலில் மகா கும்பாபிஷேக நிகழ்ச்சிக்காக திருக்கோயில் வளாகத்தில் யாகசாலை பூஜைகளுடன் தொடங்கி கணபதி ஓமம் , பூர்ணாகதி, பூர்ண கும்ப ஹோமம் நடைபெற்றது . இதனைத் தொடர்ந்து பூஜை செய்யப்பட்ட கலசங்களில் இருந்த புனித நீர் மேல தாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு பத்ரகாளி அம்மன் திருக்கோயில் புனித கலசங்களுக்கு நீர் ஊற்றப்பட்டது பக்தர்கள் ஓம் சக்தி ஓம் சக்தி என்று பக்தி கோஷத்துடன் சாமி தரிசனம் செய்தனர். திருக்கோயில் சார்பில் பிரசாதங்கள் மற்றும் புனித மகா கும்பாபிஷேக நீர் வழங்கப்பட்டது.

Tags

Next Story