ராமநாதபுரம் : உலக நன்மை வேண்டி மகா சாந்தி யாகம்

ராமநாதபுரம் : உலக நன்மை வேண்டி மகா சாந்தி யாகம்

மகா சாந்தி யாகம்

ராமநாதபுரம் மீண்டும் இந்தியாவின் பிரதமராக நரேந்திர மோடி ஆட்சிக்கு வருவார் உலக நன்மை வேண்டி மகாசாந்தியாகத்தில் சீனிவாசன் சாஸ்திரிகள் அருள்வாக்கு அளித்தார்

ராமநாதபுரம் அருள்மிகு ஸ்ரீ வழிவிடும் முருகன் கோயிலில் காகம் டிரஸ்ட், காகம் நண்பர் குழு சார்பாக சுவாமி சீனிவாச சாஸ்திரி அருள் வாக்கு ராஜலட்சுமி தலைமையில் உலக நன்மை வேண்டி சனிப்பெயர்ச்சி இலவச மகா சாந்தி யாகம் நடைபெற்றது. இந்த சனிப்பெயர்ச்சியானது மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு சனி பகவான் பெயர்ச்சி பெரும் நாளாகும். சனி பகவான் கும்ப ராசிக்கு இடம்பெறும் தருணத்தில் உலக நன்மை வேண்டி இந்த மகா சாந்தியாகம் நடைபெற்றது. இந்த கும்ப ராசியில் 6.3.2026 வரை சனி பகவான் அந்த ராசியிலே சஞ்சரிப்பார். மேலும் 12 ராசிகளுக்கும் 27 நட்சத்திரங்களுக்கும் மகா சாந்தியாகும் நடைபெற்றது.

இலவச மகா சாந்தியாகத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இது பற்றி காகம் அறக்கட்டளை நிர்வாக இயக்குனர் அருள்வாக்கு சர்வ சாதகம் சீனிவாச சாஸ்திரி செய்தியாளர்களிடம் கூறுகையில். மத்தியில் மீண்டும் பாஜக அரசாங்கம் அமையும் பாரத பிரதமராக மீண்டும் நரேந்திரமோடி பதவி ஏற்பார் தமிழகத்தில் திமுக ஆட்சி தொடர்ச்சியாக 5 ஆண்டுகள் முழுமை பெறும் பாதகம் இல்லை என தெரிவித்தார் ராமநாதபுரம் நகரில் உள்ள முக்கிய பிரமுகர்கள் அரசு அதிகாரிகள் காவல்துறையினர் ஆன்மீக முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்ட பலரும் இந்த இலவச மகா சாந்தி யாகத்தில் கலந்து கொண்டு பயனடைந்தனர் அருள் வாக்கு ராஜலட்சுமி அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டார். இலவச மகா சாந்தியில் கலந்து கொண்ட அனைவருக்கும் இலவச சிற்றுண்டிகள் வழங்கப்பட்டது.

Tags

Next Story