மகாவீரர் ஜெயந்தி : டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை - ஆட்சியர் அறிவிப்பு

மகாவீரர் ஜெயந்தி : டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை - ஆட்சியர் அறிவிப்பு

மாவட்ட ஆட்சியர் சாந்தி

தர்மபுரி மாவட்டத்தில் மகாவீரர் ஜெயந்தி மற்றும் மே தினம் அன்று டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

தர்மபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் தருமபுரி மாவட்டத்தில் எதிர்வரும் 21.04.2024 ஞாயிற்றுக்கிழமை "மகாவீர் ஜெயந்தி" மற்றும் 01.05.2024 (புதன் கிழமை) "மே - தினம்" ஆகிய இரண்டு நாட்கள் தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின்கீழ் செயல்பாட்டில் உள்ள அரசு மதுபான சில்லறை விற்பனை கடைகள், அவற்றுடன் இணைந்த மதுக்கூடங்கள் மற்றும் FL-3, FL-3A / FL-4A உரிமம் பெற்ற தனியார் ஓட்டல்களின் மதுக்கூடங்கள் / முன்னாள் படைவீரர் மது விற்பனைக்கூடம் அனைத்தும் மதுபானங்கள் விற்பனை இன்றி மூடிவைக்க உத்தரவிடப்படுகிறது.

மீறி எவரேனும் செயல்பட்டாலோ அல்லது கள்ளத்தனமாக மது விற்பனையில் ஈடுபட்டாலோ சட்டப்படி கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் கி.சாந்தி தெரிவித்துள்ளார்.

Tags

Read MoreRead Less
Next Story