புகலூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி: மின் நிறுத்தம்

புகலூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி: மின் நிறுத்தம்
துணை மின் நிலையம்
புகலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் மின் வினியோகம் நிறுத்தப்படுகிறது.

புகலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள். மின் வினியோகம் நிறுத்தம். கரூர் மாவட்டம், புகலூரில் செயல்படும் 110 கேவி திறன் கொண்ட துணை மின் நிலையத்தில், மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், (08.01.24) நாளை புகலூர் துணை மின் நிலையத்திலிருந்து மின்விநியோகம் பெறும் புகலூர்,

வேலாயுதம்பாளையம், தோட்டக்குறிச்சி, தளவாபாளையம், சேமங்கி, நடையனூர், திருக்காடுதுறை, கவுண்டன்புதூர், நானபரப்பு, தர்மராஜபுரம், ஒரத்தை, சாலைதோட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளுக்கு மின்விநியோகம் (08.01.24) நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இருக்காது. என மின்வாரிய பொறியாளர்கள் அறிவித்துள்ளனர்.

மேலும்,மேற்கண்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள், தங்கள் பணிகளை முன்கூட்டியே முடித்துக் கொள்ளுமாறு ஆலோசனை வழங்கியுள்ளனர் மின்வாரிய அதிகாரிகள்.

Tags

Next Story