திமுக வேட்பாளரை வெற்றி பெற செய்யுங்கள் - செல்வப்பெருந்தகை

திமுக வேட்பாளரை வெற்றி பெற செய்யுங்கள் - செல்வப்பெருந்தகை

காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை 

ஈரோடு இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளருக்கு திமுக அமைச்சர்கள் எல்லாம் எப்படி உழைத்து வெற்றி பெற செய்தார்களோ அதேபோல் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் நிற்கிற வேட்பாளர் அன்னியூர் சிவாவையும் காங்கிரஸ் கட்சியினரின் உழைப்பால் வெற்றிபெற வைக்க வேண்டும் என காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்தார்.

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தி.மு.க. வேட்பாளர் அன்னியூர் சிவாவை ஆதரித்து காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மாநிலத்தலைவர் செல்வப் பெருந்தகை கலந்து கொண்டு தி.மு.க. வேட்பாளர் அன்னியூர் சிவாவை ஆதரித்து பேசினார். அப்போது அவர் பேசுகையில், இந்தியா கூட்டணியாகிய நாங்கள் ஒற்றுமையாக செயல்பட்டதால்தான் நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் 40-க்கு 40 வெற்றி கிடைத்துள்ளது. அதன் தொடர்ச்சியாக விக்கிரவாண்டி இடைத் தேர்தல் வெற்றியும் அமையப்போகிறது.

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி 25 ஆண்டுகள் கூட்டணி தொடர கையெழுத்திட்டதாக கூறியுள்ளார். 25 ஆண்டுகள் மட்டுமல்ல 250 ஆண்டுகளுக்கு இந்தியா கூட்டணி தொடரும். ஏற்கனவே கடந்த மாதம் மக்கள் தீர்ப்பு அளித்து விட்டனர். தி.மு.க. 3 ஆண்டுகள் சிறப்பான ஆட்சி செய்திருக்கிறது. ஈரோடு இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு அமைச்சர்கள் எல்லாம் எப்படி உழைத்து வெற்றி பெற செய்தார்களோ அதேபோல் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் நிற்கிற வேட்பாளர் அன்னியூர் சிவாவையும் நாம் உழைப்பால் வெற்றிபெற வைக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். இதில் அமைச்சர் பொன்முடி, எஸ். ஜெகத்ரட்சகன் எம்.பி., முன்னாள் காங்கிரஸ் மாநில தலை வர்கள் கிருஷ்ணசாமி, தங்கபாலு, அழகிரி, ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், மாநில துணைத்தலைவர்கள் குலாம் மொய்தீன், ரங்கபூபதி, மாவட்ட தலைவர் சீனிவாசகுமார் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

Tags

Next Story