உப்பிடமங்கலம் பேரூராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்

உப்பிடமங்கலம் பேரூராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடைபெற்றது.

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் தாலுகாவில் உள்ள உப்பிடமங்கலம் பேரூராட்சி அலுவலகம் அருகே உள்ள சமுதாய கூடத்தில் "மக்களுடன் முதல்வர் திட்ட" முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் பேரூராட்சிக்குட்பட்ட சுற்றுவட்டார பகுதியில் உள்ள பொதுமக்கள், தங்கள் பிரச்சனைகள் குறித்த விபரங்களை மனுக்களாக அளித்தனர்.

இந்த முகாமில் பங்கேற்ற அரசுத்துறை அதிகாரிகள், பொதுமக்களிடமிருந்து பெற்ற மனுக்களை பதிவேற்றம் செய்து அவர்களுக்கு மனு ரசீது அளித்தனர். இந்த முகாமில் கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் சிவகாமசுந்தரி நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது பொதுமக்கள் வழங்கும் மனுக்கள் தொடர்பான பிரச்சனைகளை எதிர்கொள்வது குறித்து, அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் தாந்தோணி மலை கிழக்கு ஒன்றிய செயலாளர் ரகுநாதன், உப்பிடமங்கலம் பேரூராட்சி தலைவர் திவ்யா தங்கராசு, உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசுத்துறை அதிகாரிகள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டு "மக்களுடன் முதல்வர்" திட்ட முகாமை சிறப்பித்தனர்.

Tags

Next Story