மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம்

மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம்
மக்களுடன் முதல்வர் திட்டம்
கெங்கவல்லி வட்டம் தம்மம்பட்டி பேரூராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை அளித்தனர்
சேலம் மாவட்டம் கெங்கவல்லி வட்டம் தம்மம்பட்டி பேரூராட்சியில் 'மக்களுடன் முதல்வர்' திட்டம், கொங்கு வேளாளர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. முகாமை ஆத்தூர் ஆர்டிஒ ரமேஷ் தொடங்கி வைத்தார். பேரூராட்சி செயல் அலுவலர் சுலைமான் சேட், தம்மம்பட்டி திமுக பொறுப்பாளர்சண்முகம், பேரூராட்சி தலைவர் கவிதா ராஜா, துணை தலைவர் சந்தியா ரஞ்சித் குமார், கவுன்சிலர்கள் நடராஜ், பழனிமுத்து, தாசில்தார் பாலாஜி, இன்ஸ்பெக்டர் முருகேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு கோரிக்கை மனுக்களை வழங்கினர்.

Tags

Next Story