மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் - துண்டு பிரசுரம் வழங்குதல்

மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் - துண்டு பிரசுரம் வழங்குதல்
மக்களுடன் முதல்வர் துண்டு பிரசுரம்
மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் குறித்து சங்கராபுரம் பேரூராட்சியில் விழிப்புணர்வு ஏற்படுத்த துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது
சங்கராபுரத்தில் மக்களுடன் முதல்வர் திட்டம் குறித்து பொதுமக்களுக்கு துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. சங்கராபுரம் பேரூராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் பொது மக்களிடம் நேரடியாக மனுக்கள் பெறும் சிறப்பு முகாம் வரும் 27ம் தேதி சங்கராபுரம் வெற்றி திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடாக பொது மக்கள் தங்களின் கோரிக்கை மனுக்களை அளிப்பது குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரம் பேரூராட்சி செயல் அலுவலர் சம்பத்குமார் வழங்கினார். இளநிலை உதவியாளர் ஜெயபிரகாஷ் உடனிருந்தார்.

Tags

Next Story