மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் - ஆர்வமுடன் பங்கேற்ற பொதுமக்கள்

மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் - ஆர்வமுடன் பங்கேற்ற பொதுமக்கள்

மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்

சங்ககிரி அருகே அரசிராமணியில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் 424 மனுக்கள் அளிக்கப்பட்டன
மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் சேலம் மாவட்டம் சங்ககிரி வட்டம், அரசிராமணி,குள்ளம்பட்டி சமுதாய கூடத்தில் நடைபெற்றது. சங்ககிரி வருவாய் கோட்டாட்சியர் லோகநாயகி தலைமையில் நடைபெற்ற முகாமில் அரசிராமணி பேரூராட்சித்தலைவர் காவேரி முன்னிலை வகித்தார். இம்முகாமில் மகளிர் உரிமைத்தொகை, வீட்டு மனை பட்டா, முதியோர் உதவித்தொகை, குடும்ப அட்டை, சாலை, குடிநீர் வசதிகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 424 மனுக்களை பொதுமக்கள் வழங்கினர். முகாமில் வழங்கப்பட்ட மனுவினை அந்தந்த துறைகளுக்கு பிரித்து அனுப்பும் பணிகளி வருவாய், பேரூராட்சி அலுவலர்கள் ஈடுபட்டனர் . அப்போது சங்ககிரி வட்டாட்சியர் அறிவுடைநம்பி, தலைமையிடத்து துணை வட்டாட்சியர் தமிழ்செல்வி, தேவூர் வருவாய் ஆய்வாளர் கலைச்செல்வி உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்கள் இதில் கலந்து கொண்டனர்.

Tags

Next Story