திண்டுக்கல் : மக்களுடன் முதல்வர் முகாம்

திண்டுக்கல் : மக்களுடன் முதல்வர் முகாம்

மக்களுடன் முதல்வர் 

அய்யலுாரில் பேரூராட்சி சார்பில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் சிறப்பு குறைதீர் முகாமில் பொதுமக்கள் தங்களின் கோரிக்கை மனுக்களை அளித்தனர்
அய்யலுாரில் பேரூராட்சி சார்பில் மக்களுடன் முதல்வர் சிறப்பு குறைதீர் முகாம் நடந்தது. பேரூராட்சி தலைவர் கருப்பன் தலைமை வகித்தார். தாசில்தார் விஜயலட்சுமி, சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் மணிமொழிதேவி முன்னிலை வகித்தனர். பாண்டீஸ்வரி வரவேற்றார். பல்வேறு துறைகளை சார்ந்த அலுவலர்கள், பணியாளர்கள் பொதுமக்களின் மனுக்களை ஆன் லைனில் பதிவேற்றம் செய்தனர். வடமதுரை ஒன்றிய தி.மு.க., செயலாளர் சுப்பையன், நகர செயலாளர் கணேசன், நிர்வாகிகள் செந்தில், தினேஷ், கருப்பையா, வீரமணி பங்கேற்றனர்.

Tags

Next Story