சங்கரன்கோவிலில் மக்களுடன் முதல்வா் திட்ட முகாம் நடைபெற்றது

சங்கரன்கோவிலில் மக்களுடன் முதல்வா் திட்ட முகாம் நடைபெற்றது
சங்கரன்கோவிலில் மக்களுடன் முதல்வா் திட்ட முகாம் நடைபெற்றது
தென்காசி மாவட்டம் , சங்கரன்கோவிலில் நடந்த மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு கோரிக்கை மனுக்களை அளித்தனர்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் திருவள்ளுவா் சாலையில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் மக்களுடன் முதல்வா் திட்ட முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. இந்த முகாமில் பல்வேறு துறைகளின் அலுவலா்கள் பங்கேற்று பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றனா். சங்கரன்கோவில் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை அளித்தனா். குறிப்பாக, இலவச வீட்டுமனைப் பட்டா கேட்டு அதிகம்போ் மனு கொடுக்க திரண்டதால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனையடுத்து போலீஸாா் அப்பகுதியில் போக்குவரத்தை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனா்.

Tags

Next Story