ஸ்ரீரங்கத்தில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் முகாம்

ஸ்ரீரங்கத்தில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் முகாம்

மக்களுடன் முதல்வர் 

ஸ்ரீரங்கம் ஆண்டவர் கல்லூரியில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை அளித்தனர்

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் தொகுதிக்குட்பட்ட வார்டு எண் 4,5,6 உட்பட்ட பகுதி மக்களுக்காக ஸ்ரீரங்கம் ஆண்டவர் கலை அறிவியல் கல்லூரியில் இன்று மக்களுடன் முதல்வர் திட்டம் முகாம் நடைபெற்றது.

முகாமில் வருவாய்த்துறை ,காவல்துறை, பொதுப்பணித்துறை, மின்வாரியத்துறை, மாற்றுத்திறனாளிகள் ,தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை மற்றும் மகளிர் உரிமைத்துறை ,பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைகள் உள்ளிட்ட பல்வேறு அரசுத்துறை அலுவலர்கள் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றனர்.

மனுக்கள் மீது உரிய விசாரணை நடத்தி ஒரு மாதத்திற்குள் தீர்வு காணப்படும் என பொதுமக்களிடம் தெரிவிக்கப்பட்டது ஸ்ரீரங்கம் பகுதிக்கு உட்பட்ட 4,5,6 வார்டுக்கு உட்பட்ட திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கைகளை மனுக்களாக அளித்தனர்.

Tags

Next Story