சேலம் : மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்

சேலம் : மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்

மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்

சேலம் தளவாய்ப்பட்டியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்

சேலம் ஊராட்சி ஒன்றியம், தளவாய்ப்பட்டியில் உள்ள சமுதாய கூடத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட குறைதீர்க்கும் முகாம் நேற்று நடைபெற்றது. இந்த முகாமிற்கு சேலம் மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜேந்திரன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி முகாமை தொடங்கி வைத்தார். சேலம் வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் ரெயின்போ பி.நடராஜன், சேலம் ஒன்றியக்குழு தலைவர் மலர்க்கொடி ராஜா, தளவாய்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் அந்த பகுதியை சேர்ந்த 230-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு புதிய மின் இணைப்பு, சாலை வசதி, சாக்கடை வசதி, பட்டா மாற்றம், உதவித்தொகை, உரிமைத்தொகை உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை கொடுத்தனர்.

இந்த மனுக்களை பெற்றுக்கொண்டு ஒவ்வொன்றையும் பரிசீலனை செய்து உடனடியாக தீர்வு காணப்படும் என பொதுமக்களிடம் அதிகாரிகள் உறுதி அளித்தனர். இந்த முகாமில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மணிவாசகம், அனுராதா மற்றும் தி.மு.க. கட்சி நிர்வாகிகள் சசிகுமார், கண்ணன், கார்த்தி, சந்திரா, ராமு, சந்திரன், மாணிக்கம், பழனி மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story