வேர்கிளம்பி பேரூராட்சியில்  மக்களுடன் முதல்வர் திட்டம்

வேர்கிளம்பி பேரூராட்சியில்  மக்களுடன் முதல்வர் திட்டம்
மக்களுடன் முதல்வர் திட்டத்தை துவக்கிய குமரி எம்.பி
குமரி மாவட்டம் திருவட்டார் வட்டத்துக்கு உட்பட்ட வேர்கிளம்பி பேருராட்சி நடைபெற்ற மக்களுடன் முதல்வர் முகாமை விஜய்வசந்த் எம்.பி துவக்கி வைத்தார்.
குமரி மாவட்டம் திருவட்டார் வட்டத்துக்கு உட்பட்ட வேர்கிளம்பி பேருராட்சி சார்பாக மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் சிறப்பு முகாம் கல்லங்குழி சிஎஸ்ஐ திருமண மண்டபத்தில் வைத்து நடைபெற்றது. திருவட்டார் தாசில்தார் புரந்தரதாஸ், தலைமை தாங்கினார். பேருராட்சி தலைவர் சுஜிர்ஜெபசிங்குமார், செயல் அலுவலர் அகஸ்திலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கன்னியாகுமரி தொகுதி எம்.பி விஜய்வசந்த் கலந்துக் கொண்டு சிறப்பு முகாம் மூலம் பொது மக்களிடம் இருந்து கோரிக்கைகள் பெறும் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். அவருடன் வார்டு கவுண்சிலர்கள் மற்றும் அரசு துறை அதிகாரிகள் அலுவலர்கள் பலர் கலந்துக் கொண்டனர். முகாமில் பேருராட்சிக்கு உட்பட்ட ஏராளமான பொதுமக்கள் கலந்துக் கொண்டு தங்கள் கோரிக்கைகளை பேருராட்சி பணியாளர்களிடம் கொடுத்து கணினி மூலம் பதிவேற்றம் செய்தனர்.

Tags

Next Story