சேலம் மாநகராட்சியில்`மக்களுடன் முதல்வர்' திட்ட முகாம்

சேலம் மாநகராட்சியில்`மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்
சேலம் 16வது வார்டுக்குட்பட்ட பகுதியில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் முகாமில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டு கோரிக்கை மனுக்கள் அளித்தனர்
சேலம் மாவட்டத்தில் `மக்களுடன் முதல்வர்' திட்ட முகாம் தொடங்கி நடைபெற்று வருகிறது. சேலம் மாநகராட்சியில் பல்வேறு வார்டு பகுதிகளில் முகாம் நடைபெற்றது. அதன்படி 16-வது வார்டுக்குட்பட்ட குளூனி மெட்ரிக் பள்ளியில் நடைபெற்ற முகாமில் கவுன்சிலர் வசந்தா மயில்வேல் வரவேற்று பேசினார். மேயர் ராமச்சந்திரன் தலைமை தாங்கி முகாமை தொடங்கி வைத்தார். தொடர்ந்து வார்டு மக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். இதில் அஸ்தம்பட்டி மண்டல தலைவர் உமாராணி மின்வாரிய செயற்பொறியாளர் குணவர்த்தினி, மாநகராட்சி உதவி செயற்பொறியாளர் சுரேஷ், தாசில்தார் பாலாஜி, சுகாதார ஆய்வாளர் சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story