மக்களுடன் முதல்வர் முகாம் - எம்எல்ஏ பங்கேற்பு

மக்களுடன் முதல்வர் முகாம் - எம்எல்ஏ பங்கேற்பு
மக்களுடன் முதல்வர் முகாம், எம்எல்ஏ பங்கேற்பு
184 பெருங்குடி மாமன்ற உறுப்பினர் அலுவல வளாகத்தில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களின் கோரிக்கை மனுக்களை அளித்தனர்.
சோழிங்கநல்லூர் தொகுதிக்குட்பட்ட பெருநகர சென்னை மாநகராட்சி மண்டலம் 14-ல் உள்ளடங்கிய வார்டு எண் 184 பெருங்குடி மாமன்ற உறுப்பினர் அலுவல வளாகத்தில் பொது மக்களிடம் பெறப்படும் மனுக்கள் மீது உடனடி தீர்வு காணுகின்ற வகையில் மக்களுடன் முதல்வர் எனும் முகாம் நடைபெறுவதை சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் அரவிந்த் ரமேஷ் நேரில் சென்று பார்வையிட்டு பொது மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டுமென அரசு அதிகாரிகளிடம் வலியுறுத்தினார். இந்நிகழ்வில், சோழிங்கநல்லூர் மேற்கு பகுதி கழக செயலாளரும்,14-வது மண்டல குழு தலைவர் S.V ரவிச்சந்திரன்,வட்ட செயலாளர் டேவிட் சௌந்தர் ராஜன், தேவராஜ்,பகுதி இளைஞரணி அமைப்பாளர் ஸ்ரீகாந்த்,உள்ளிட்ட நிர்வாகிகள்,பொது மக்கள், பயனாளிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.

Tags

Next Story