அரசுப்பள்ளியில் மலேரியா விழிப்புணர்வு

அரசுப்பள்ளியில் மலேரியா விழிப்புணர்வு

திட்டச்சேரி அரசுப்பள்ளியில் மலேரியா விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. 

திட்டச்சேரி அரசுப்பள்ளியில் மலேரியா விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

நாகை மாவட்டம் திட்டச்சேரி அரசுப்பள்ளியில் மலேரியா விழிப்புணர்வு நிகழ்ச்சி மலேரியா எதிர்ப்பு மாதத்தை முன்னிட்டு திட்டச்சேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில் மலேரியா விழிப்புணர்வு நிகழ்ச்சி

திட்டச்சேரி அரசு மேல்நிலைப் பள்ளியில் நேற்று நடந்தது.வட்டார மருத்துவ அலுவலர் மணிசுந்தரம் அறிவுறுத்தலின் பேரில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு மருத்துவ அலுவலர் ஜனரஞ்சனி தலைமை தாங்கினார்.பள்ளி தலைமை ஆசிரியர் மகேஸ்வரன் முன்னிலை வகித்தார்.இதில் மலேரியா குறித்தும்,பாதுகாப்பு வழிமுறைகள் குறித்தும் பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு அனைவரும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். இதில் பள்ளி உதவி தலைமை ஆசிரியர் பூங்குழலி,சுகாதார ஆய்வாளர் பரமநாதன் மற்றும் பள்ளி ஆசிரியர்கள்,மாணவ மாணவியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story