வெள்ளகோவிலில் மலேரியா விழிப்புணர்வு நிகழ்ச்சி

வெள்ளகோவிலில் மலேரியா விழிப்புணர்வு நிகழ்ச்சி

 மலேரியா விழிப்புணர்வு

வெள்ளகோவில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மலேரியா விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
வெள்ளகோவில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்ற மலேரியா விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ராஜலக்ஷ்மி தலைமை தாங்கினார். மலேரியா நோய் எதிர்ப்பு மாதத்தை முன்னிட்டு இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் மலேரியா நோய்க்கான அறிகுறிகள், பரிசோதனைகள், தடுப்பு முறைகள் ஆகியவற்றை பற்றி விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. மேலும் இந்த நோய் நல்ல தண்ணீரில் உருவாகும் கொசுக்கள் மூலம் பரவுவதால் சுற்றுப்புறங்களில் மழைநீர் தேங்காாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் வட்டார சுகாதார அமைப்பாளர் ராஜேந்திரன், சுகாதார ஆய்வாளர் கதிரவன் மற்றும் சுகாதார நிலையம் மருத்துவப் பணியாளர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story