மலேரியா காய்ச்சல் பரிசோதனை முகாம்

மலேரியா காய்ச்சல் பரிசோதனை முகாம்

மருத்துவ முகாம் 

கந்தர்வகோட்டை ஊராட்சி, கொத்தகம் கிராமத்தில் மலேரியா காய்ச்சல் பரிசோதனை முகாம் நடைபெற்றது.

கொத்தகம் கிராமத்திலிருந்து தென்ஆப்பிரிக்கா நாட்டிற்கு வேலைக்கு சென்றவர் சில தினங்களுக்கு முன்பு இங்கு வந்துள்ளார். மலேரியா காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இதுபற்றி அறிந்த சுகாதார துறையினர் இந்தக் கிராமத்தில் வேறு யாரேனுக்கும் காய்ச்சல் அறிகுறி உள்ளதா என ஆய்வு செய்தனர்.

புதுநகர் ஆரம்ப சுகாதார நிலைய தலைமை மருத்துவர் மணிமாறன் தலைமையில் மருத்துவர் பரணிதரன், சுகாதார ஆய்வாளர் முத்துகுமார், பழனிச்சாமி, திருநாவுக்கரசு, தவக்குமார், தமிழ்வாணன் ஆகியோர் கொண்ட குழுவினர் கிராமத்தைச் சேர்ந்த 250 நபர்களிடம் மலேரியா குறித்த ஆய்வுக்காக ரத்தம் மாதிரி எடுத்து பரிசோதனை செய்தனர்.

மேலும், 48 நபர்களுக்கு மருத்துவ முகாமில் சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர்ந்து ஊராட்சி சார்பில், கிராமம் முழுவதும் புகை மருந்து அடிக்கப்பட்டது.

Tags

Next Story