புளியங்குடி அருகே குளத்தில் ஆண் சடலம் மீட்பு

புளியங்குடி அருகே குளத்தில் ஆண் சடலம் மீட்பு
புளியங்குடி அருகே குளத்தில் ஆண் சடலம் மீட்பு
தென்காசி மாவட்டம்,புளியங்குடியில் உள்ள குளத்தில் கட்டிட தொழிலாளி சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகேயுள்ள இலந்தைகுளத்தில் ஆண் சடலம் மிதப்பதாக புளியங்குடி போலீஸாருக்கு கிடைத்த தகவலின்பேரில் காவல் ஆய்வாளா் பாலகிருஷ்ணன், உதவி ஆய்வாளா் சஞ்சய்காந்தி மற்றும் போலீஸாா் அங்கு சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக புளியங்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிந்தனா். விசாரணையில், சடலமாக மிதந்தது புளியங்குடி முப்புடாதி அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த இசக்கிமுத்து மகன் முருகன் இவர் கட்டடத் தொழிலாளியான அவா் குளத்தில் குளிக்க சென்றபோது தவறி விழுந்து இறந்திருக்கலாம் என போலீஸாா் தெரிவித்தனா்.

Tags

Next Story