வாணியம்பாடி ரயில் நிலையத்தில் ஆண் சடலம் மீட்பு

வாணியம்பாடி ரயில் நிலையத்தில்  ஆண் சடலம் மீட்பு

மீட்கப்பட்ட சடலம்

வாணிrயம்பாடி ரயில் நிலையத்தில் தண்டவாளத்தில் தலை துண்டான நிலையில் அடையாளம் தெரியாத 50 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி ரயில் நிலையம் அருகே பொதுமக்கள் தண்டவாளத்தை கடக்காமல் நடந்து செல்ல அங்கு நடை மேம்பாலம் அமைக்க பட்டுள்ளது.இந்த நிலையில் இன்று 50 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் ஒருவர் நடை மேம்பாலத்தின் கீழே பெங்களூரிலிருந்து சென்னை மார்க்கமாக செல்லும் தண்டவாளத்தில் தலை துண்டான நிலையில் சடலமாக கிடந்துள்ளார் .

இது குறித்து பயணிகள் ஜோலார்பேட்டை ரயில்வே போலிசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைகாக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் எர்ணாகுளம் முதல் பாட்னா வரை செல்லும் விரைவு ரயில் அவர் மீது ஏறியதில்தலை துண்டாகி உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது.

மேலும் உயிரிழந்த நபர் யார் எந்த ஊரை சேர்ந்தவர் இவர் தண்டவாளத்தில் தலை வைத்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என ரயில்வே போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

Tags

Next Story