அடையாளம் தெரியாத ஆண் சடலம் - போலீசார் விசாரணை

அடையாளம் தெரியாத ஆண் சடலம் - போலீசார் விசாரணை

அடையாளம் தெரியாத சடலம் மீட்பு 

கள்ளக்குறிச்சி மாவட்டம், கச்சிராயபாளையம் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட ஆண் சடலம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி கச்சிராயபாளையம் சாலையில் உள்ள வி.ஐ.பி., கார்டன் பகுதியில் நேற்று முன்தினம் இரவு 10:00 மணியளவில் 50 வயது மதிக்கதக்க அடையாளம் தெரியாத நபர் இறந்து கிடப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, உடலை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இறந்தவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story