காட்டுப்பகுதியில் ஆண் சடலம்: போலீஸ் விசாரணை!

காட்டுப்பகுதியில் ஆண் சடலம்: போலீஸ் விசாரணை!

ஆண் சடலம்

கோவில்பட்டி அருகே காட்டுப்பகுதியில் ஆண் சடலம்: போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் மணியாச்சி அருகே காட்டுப்பகுதியில் கிடந்த ஆண் சடலத்தை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டம், மணியாச்சி அடுத்துள்ள மேல பாண்டியபுரம் ரயில் நிலையம் அருகே காட்டுப் பகுதியில் ஆண் சடலம் கிடப்பதாக மணியாச்சி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் இன்ஸ்பெக்டர் சுதந்திர தேவி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தைக் மீட்டு பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு இறந்து கிடந்தவருக்கு சுமார் 45 வயது இருக்கும். அவர் இறந்து 10 நாட்களுக்கு மேலானதால் உடல் அழுகிய நிலையில் இருந்தது. அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? எப்படி இறந்தார் என்பது குறித்து மணியாச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் அந்த பகுதியில் காணாமல் போனவர்களின் விவரங்களை சேகரித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags

Next Story