ரயில் பாதையில் ஆண் சடலம்

ரயில் பாதையில் ஆண் சடலம்

ஆண் சடலம் மீட்பு

சின்னசேலம் - விருத்தாசலம் ரயில் பாதையில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சின்னசேலம் - விருத்தாசலம் ரயில் பாதையில், எஸ்.ஒகையூர் அருகே அடையாளம் தெரியாத ஆண் நபர் இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், வரஞ்சரம் போலீசார் மற்றும் சேலம் ரயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர். அதில், 35 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரிந்த, பெயர் விலாசம் தெரியாத ஆண் நபர் ஒருவர் காயங்களுடன் இறந்து கிடந்தது தெரிந்தது. இறந்த நபரின் மார்பில் சூர்யா என ஆங்கிலத்தில் பச்சை குத்தப்பட்டுள்ளது. சம்பவம் குறித்து ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.

Tags

Next Story