திருப்பத்தூர் அருகே கழிவுநீர் கால்வாயில் ஆண் சடலம் மீட்பு

திருப்பத்தூர் அருகே கழிவு நீர் கால்வாயில் 35 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் மீட்கப்பட்டது.

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த தில்லை நகர் பகுதியில் உள்ள கழிவு நீர் கால்வாயில் 35 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் இருப்பதாக திருப்பத்தூர் நகர போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன் பேரில் விரைந்து வந்த திருப்பத்தூர் நகர போலீசார் கால்வாயில் இருந்த உடலை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் இறந்து கிடந்த நபர் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர்? எவரேனும் அடித்து கொலை செய்து கால்வாயில் வீசி சென்றார்களா? என்ற வண்ணம் போலீசார் விசாரணை மேற்கொண்டு. தில்லை நகர் பகுதியில் உள்ள கால்வாயில் அடையாளம் தெரியாத ஆண் இறந்து கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags

Next Story