சுற்றுலாப் பயணிகள் இன்றி வெறிச்சோடிய மாமல்லபுரம்

சுற்றுலாப் பயணிகள் இன்றி வெறிச்சோடிய மாமல்லபுரம்

மிக்ஜாம் புயல் காரணமாக சுற்றுலாப் பயணிகள் இன்றி வெறிச்சோடி காணப்பட்ட  மாமல்லபுரம்.

மிக்ஜாம் புயல் காரணமாக சுற்றுலாப் பயணிகள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது மாமல்லபுரம்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் புயல் காரணமாக பலத்த மழை பெய்து வருகிறது. இந்நிலையில் கடலோர நகரமான மாமல்லபுரத்தில் யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட உலக புகழ் பெற்ற பாரம்பரிய நினைவு சின்னமான கடற்கரை கோயில் வளாகத்தில் கடந்த இரண்டு நாள்களாக பெய்த மழை காரணமாக கடற்கரை கோயில் வளாகத்தில் இடது பக்கம் உள்ள படகு துறையின் படிகட்டுகள் வரை சுமாா் 3 அடி உயரத்துக்கு மழை நீா் நிரம்பியது.

மேலும் கடற்கரை கோயிலின் வலது பக்கம் உள்ள அகழியில் 2 அடி உயரத்துக்கு மழை நீா் தேங்கியது. கடல் சீற்றமும் அதிகரித்துக் காணப்பட்டது. மழை காரணமாக விடுமுறை நாளான நேற்று ஞாயிற்றுக்கிழமை சுற்றுலாப் பயணிகள் வருகையின்றி மாமல்லபுரம் கடற்கரைப் பகுதி வெறிச்சோடிக் காணப்பட்டது.

Tags

Next Story