மாம்பட்டு முத்துமாரியம்மன் அமாவாசை சிறப்பு பூஜை

மாம்பட்டு முத்துமாரியம்மன் அமாவாசை சிறப்பு பூஜை

மாம்பட்டு முத்துமாரியம்மன் அமாவாசை சிறப்பு பூஜை

பக்தர்களுக்கு அமாவாசை சேவைக் குழு சார்பில் பிரசாதங்கள் வழங்கப்பட்டது
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த மாம்பட்டு ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயிலில் கார்த்திகை அமாவாசை முன்னிட்டு மூல மூர்த்தி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. மேலும் உற்சவ மூர்த்திகளுக்கு விசேஷ திருமஞ்சனம் மற்றும் யாகசாலை பூஜைகள் நடந்தேறியது. பிறகு இரவு ஊஞ்சல் தாலாட்டு வைபவம் நடைபெற்றது. அம்மன் கோவில் பிரகாரத்தில் மேள தாளத்துடன் பவனி வந்தார். இந்த வைபவத்தில் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பங்கேற்ற அனைவருக்கும் அமாவாசை சேவைக் குழு சார்பில் பிரசாதங்கள் வழங்கப்பட்டது. அருட்சக்தி ஆறு. லட்சுமணன் ஸ்வாமிகள் பங்கேற்று பூஜை முறைகளை மேற்கொண்டார்

Tags

Next Story