அரசு மருத்துவரிடம் தகராறு செய்தவர் கைது

அரசு மருத்துவரிடம் தகராறு செய்தவர் கைது

பைல் படம் 

குடவாசல் அரசு மருத்துவமனையில் பணியில் இருந்த அரசு மருத்துவரிடம் மதுபோதையில் தகராறு செய்தவரை போலீசார் கைது செய்தனர்.
குடவாசல் அரசு மருத்துவமனையில் பணியில் இருந்த மருத்துவரை பணி செய்ய விடாமல் மது போதையில் தகராறு செய்த குடவாசல் வடக்கு தெருவை சேர்ந்த உதயகுமார் என்பவரின் மகன் பரணிதரன் என்பவர் மீது வழக்கு பதிவு செய்து சட்டபூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மருத்துவரிடம் தகராறு செய்த நபரை கைது செய்த குடவாசல் காவல் நிலைய ஆய்வாளர் ராஜ் மற்றும் காவலர்களை எஸ்பி ஜெயக்குமார் பாராட்டினார்.

Tags

Next Story