பேக்கரி உரிமையாளரை பணம் கேட்டு தாக்கியவர் கைது

பேக்கரி  உரிமையாளரை பணம் கேட்டு தாக்கியவர்  கைது
பைல் படம்
நாகர்கோவிலில் பேக்கரி கடை உரிமையாளரை பணம் கேட்டு தாக்கியவரை போலீசார் கைது செய்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில், செட்டிகுளம் பகுதியை சேர்ந்தவர் எபின் (36). இவர் கோணம் அரசு கலைக் கல்லூரி அருகே பேக்கரி கடை நடத்தி வருகிறார். சம்பவுதனம் இவரது கடைக்கு தட்டான்விளை என்ற பகுதியை சேர்ந்த சஞ்சய் பிரபு (22) என்பவர் சென்று எபினிடம் பணம் கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது. எபின் பணம் இல்லை என்று கூறி கொடுக்க மறுத்ததால் ஆத்திரமடைந்த சஞ்சய் பிரபு, பேக்கரியில் இருந்த கத்தியை எடுத்து எபினை மிரட்டி தாக்கியதாக தெரிகிறது. இது குறித்து நேசமணி நகர் போலீசில் புகார் செய்யப்பட்டது. புகாரின் பேரில் சஞ்சய் பிரபுவை போலீசார் கைது செய்தனர்.

Tags

Next Story