தாய், மகளைத் தாக்கி மிரட்டல் விடுத்தவர் கைது!

தாய், மகளைத் தாக்கி மிரட்டல் விடுத்தவர் கைது!

கோப்பு படம்

கோவில்பட்டியில் தாய், மகளைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் தாய், மகளைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவரை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி, சுப்பிரமணியபுரம் 5ஆவது தெருவைச் சோ்ந்த கூலித் தொழிலாளி பழனி. இவரது சகோதரா் சுடலை (58), கட்டடத் தொழிலாளி. இருவரது வீடுகளும் அருகருகே உள்ளன. இரு வீட்டுக்கும் ஒரு மின் மீட்டா் உள்ளதால் மின் கட்டணம் செலுத்துவதில் தகராறு ஏற்படுமாம். இந்நிலையில், நேற்று முன்தினம் பழனி மனைவி பத்மாவதி, மகள் நாகஜோதி ஆகியோா் வீட்டருகே நின்று பேசிக் கொண்டிருந்தனர். அவா்களை சுடலை அவதூறாகப் பேசித் தாக்கியதுடன், கொலை மிரட்டல் விடுத்தாராம். காயமடைந்த இருவரும் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். நேற்று அளிக்கப்பட்ட புகாரின்பேரில், கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து சுடலையைக் கைது செய்தனர்.

Tags

Next Story