வாகன சோதனையில் போலீசை தாக்கியவர் கைது

வாகன சோதனையில் போலீசை தாக்கியவர் கைது
பைல் படம்
வாகன சோதனையில் போலீசை தாக்கியவர் கைது

குமரி மாவட்டம் அஞ்சுகிராமம் காவல் நிலைய சாலையில் நேற்று இரவு போலீஸ் எஸ்ஐ ஜெயக்குமார் தலைமையில் போலீசார் வாகன சோதனை இருந்தனர். அப்போது வாலிபர் ஒருவர் பைக்கில் வந்தார். அவரிடம் போலீசார் பைக் ஆவணங்களை கேட்டனர். அப்போது அந்த வாலிபர் குடிபோதையில் இருந்ததால் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அழைத்து செல்ல முயன்றனர்.

ஆனால் அந்த வாலிபர் ஏற்கனவே கடந்த 30 ஆம் தேதி என் மீது கேஸ் போட்டீர்கள் இப்போதும் கேஸ் போட பார்க்கிறீர்களா? என போலீசிடம் தகராறு செய்துள்ளார். இதை பணியில் இருந்த எஸ்.எஸ்.ஐ செல்வம் என்பவர் செல்போனில் வீடியோ எடுத்தார். அப்போது போலீசாரை அந்த வாலிபர் தாக்கியதாக கூறப்படுகிறது.

இதில் எஸ் எஸ் ஐ ஒருவர் படுகாயம் அடைந்தார். அவரது செல்போனும் உடைந்துள்ளது. இதை அடுத்து அந்த நபரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்து காவல் நிலையம் கொண்டு சென்றனர். விசாரணையில் அவர் அழகப்பபுரம் பகுதியை சேர்ந்த சூர்யா (21) என்பது தெரிய வந்தது. இது குறித்து எஸ்.ஐ ஜெயக்குமார் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து போலீசார் சூர்யாவை கைது செய்தனர்.

Tags

Next Story