தொழில் போட்டி இருவரை தாக்கிய ஒருவர் கைது !

தொழில் போட்டி  இருவரை தாக்கிய ஒருவர் கைது !

அரவக்குறிச்சி

தொழில் போட்டியால் இருவரை தாக்கிய நபரை போலிசார் கைது செய்தனர்.
தொழில் போட்டியால் இருவரை தாக்கிய ஒருவர் கைது. காவல்துறை நடவடிக்கை. கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி காவல் எல்லைக்குட்பட்ட, பாகனத்தம் பகுதியைச் சேர்ந்தவர் தாமரைச்செல்வன் வயது 51. இதேபோல ஆண்டிப்பட்டி கோட்டை, சொக்கலாதபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்குமார் வயது 31. இதேபோல, கரூர் மாவட்டம், கடவூர் தாலுக்கா, பஞ்சப்பட்டி அருகே உள்ள வீரசிங்கம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ் வயது 30. இவர்கள் மூவரும் ஜேசிபி வாகனம் தொடர்பான வியாபாரம் செய்து வந்தனர். இதில் ஒருவருக்கொருவர் இடையே ஏற்பட்ட தொழில் போட்டியால் முன் விரோதம் ஏற்பட்டது. இந்நிலையில் மார்ச் 23ஆம் தேதி இரவு 7:30- மணி அளவில், அரவக்குறிச்சி சபரி ஐயங்கார் பேக்கரி அருகே, தாமரைச்செல்வனும் ராஜ்குமாரும் நின்று கொண்டு இருந்தனர். அப்போது, அங்கு தன்னிச்சையாக வந்த பிரகாஷ், தாமரைச்செல்வனை தகாத வார்த்தை பேசி திட்டி உள்ளார். இதனை ராஜ்குமார் தடுத்துள்ளார். இதனால், இருதரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் பிரகாஷ், ராஜ்குமார் மற்றும் தாமரைச்செல்வன் ஆகியோரை தகாத வார்த்தை பேசி திட்டியதோடு, இரும்புராடால் தாக்கி காயப்படுத்தியுள்ளார். இந்த சம்பவத்தில் தாமரைச்செல்வனுக்கும், ராஜ்குமாருக்கும் தலையிலும் பலத்த காயம் ஏற்பட்டதால், உடனடியாக இருவரையும் அரவக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக தாமரைச்செல்வன் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், குற்றச்செயலில் ஈடுபட்ட பிரகாஷை கைது செய்து, பின்னர் அவர் மீது வழக்கு பதிவு செய்து, காவல் நிலைய பிணையில் விடுவித்து நடவடிக்கை மேற்கொண்டனர் அரவக்குறிச்சி காவல்துறையினர்.

Tags

Next Story