சேலத்தில் தொழிலாளியை இரும்பு கம்பியால் தாக்கியவர் கைது

சேலத்தில் தொழிலாளியை இரும்பு கம்பியால் தாக்கியவர் கைது

சேலத்தில் தொழிலாளியை இரும்பு கம்பியால் தாக்கியவர் கைது

முன்விரோதத்தால் இளைஞரை கம்பியால் தாக்கியவர் மீது காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
சேலம் அன்னதானப்பட்டி முருகன் நகர் கருவாட்டு மண்டி பகுதியை சேர்ந்தவர் சங்கர் (வயது 40). தொழிலாளி. இவருக்கும் அதே பகுதியை சிலருக்கும் முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சங்கர் கடந்த 27-ந் தேதி அங்குள்ள மளிகை கடையில் பொருட்கள் வாங்க மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது இருதரப்பினருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் சங்கரை இரும்பு கம்பியால் தாக்கியதாக தெரிகிறது. இதில் காயமடைந்த அவர் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின் பேரில் அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து அதே பகுதியை சேர்ந்த அங்கமுத்து (27) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரது கூட்டாளி ஆனந்த் என்பவர் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Tags

Next Story