வீட்டில் மான் இறைச்சி சமைத்தவர் கைது

வீட்டில் மான் இறைச்சி சமைத்தவர் கைது

அரூர் வட்டத்துக்கு உட்பட்ட சந்திராபுரத்தில் மான் இறைச்சி சமைத்தவரை கைது செய்து ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்தனர்.


அரூர் வட்டத்துக்கு உட்பட்ட சந்திராபுரத்தில் மான் இறைச்சி சமைத்தவரை கைது செய்து ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்தனர்.
தர்மபுரி மாவட்டம், அரூர் வட்டம் மற்றும் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சந்திராபுரத்தை சேர்ந்தவர் சக்திவேல், இவருக்கு வயது45, இவர் நேற்று மாலை தன் வீட்டில் மான் இறைச்சியை சமைத்து சாப்பிட்டார். இதையறிந்த மொரப்பூர் வனச்சரக அலுவலர் ஆனந்தகுமார், வனவர்கள் சாக்கப்பன், வசந்தராஜ் உள்ளிட்ட வனத்துறையினர் சென்று சக்திவேலை பிடித்தனர். பின்னர் அவரை, தர்மபுரி மாவட்ட வன அலுவலர் ராஜாங்கம் முன்னிலையில் இன்று ஆஜர் படுத்தினர். அவர் சக்திவேலுக்கு, ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்தார்.

Tags

Next Story