ஹோட்டல் உரிமையாளரின் பணத்தை பறித்துச் சென்றவர் கைது

குற்றவாளி கைது

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி பாவா நகர் பகுதியைச் சேர்ந்தவர் கோபால் வயது 43 இவரப் பகுதியில் மக்கள் ஓட்டல் என்ற பெயரில் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் நவம்பர் 9ஆம் தேதி காலை 8 மணி அளவில் இந்த கடைக்கு வந்த மதுரை மாவட்டம் மேலூர் அறிட்டப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் காக்கப்பன் என்கிற கார்த்திக் வயது 30 என்பவர் கடை முன்பு நடந்து கொண்டிருந்த கோபாலிடம் கத்தியை காட்டி மிரட்டி கை விரலில் அணிந்து இருந்த கால் பவுன் மோதிரத்தையும், அவர் பாக்கெட்டில் வைத்திருந்த ரூபாய் 3,000- பறித்துக் கொண்டு ஓடினார்.

இது தொடர்பாக கோபால் அரவக்குறிச்சி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், இது தொடர்பாக பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளி காக்கப்பன் என்கிற கார்த்தி்க்கை கைது செய்து, அவர் மீது நவம்பர் 9ஆம் தேதி வழக்கு பதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி, சிறையில் அடைத்து நடவடிக்கை மேற்கொண்டனர் அரவக்குறிச்சி காவல்துறையினர்.

Tags

Next Story