ஆம்பூர் அருகே மலைப்பாம்பை கொன்று எரித்த நபர் கைது.

ஆம்பூர் அருகே மலைப்பாம்பை கொன்று எரித்த நபர் கைது.

எரிந்த மலைப்பாம்பை ஆய்வு செய்யும் அதிகாரிகள்

ஆம்பூர் அருகே மலைப்பாம்பை கொன்று எரித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே மலைப்பாம்பை கொன்று எரித்த நபர் கைது. திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த சின்னவரீகம் பகுதியில் பாதி எரிந்த நிலையில் மலைப்பாம்பு ஒன்று கிடப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

அதன் அடிப்படையில் மாவட்ட வன அலுவலர் தலைமையிலான வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டதில் அதே பகுதியைச் சேர்ந்த கணேசன் என்ற இளைஞர் அவரது வீட்டின் அருகே நேற்று இரவு ஊர்ந்து சென்று கொண்டிருந்த மலைப்பாம்பை அடித்து கொன்று எரித்தை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து அந்த இளைஞரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மலைப்பாம்பை அடித்து கொன்று எரித்த இளைஞரை வனத்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வரும் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story