கஞ்சா விற்பனை செய்த நபர் கைது

கஞ்சா விற்பனை செய்த நபர் கைது

கஞ்சா விற்பனை செய்த நபர் கைது

தர்மபுரி மாவட்டம், பெல்ராம்பட்டியில் கஞ்சா விற்பனை செய்த நபரை காவல்துறையினர் கைது செய்தனர்.

தர்மபுரி மாவட்டம் , பாலக்கோடு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மாரண்டஅள்ளி காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஜெயராமன் மற்றும் காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டபோது ,பெல்ரம்பட்டியில் சந்தேகப்படும் படி கையில் பிளாஸ்டிக் பையுடன் ஒருவர் நின்றுக் கொண்டிருந்தார். அவர் அங்கு காவலர்கள் வருவதை பார்த்ததும் ஓட்டம் பிடித்தார். பின்னர் அவரை காவலர்கள் துரத்தி சென்று பிடித்தனர்.

தொடர்ந்து அவரிடம் விசாரித்தபோது, அவர் அதேபகுதியை சேர்ந்த சேட்டு என்பதும் பிளாஸ்டிக் பையில் கஞ்சா வைத்து விற்பனை செய்து வந்ததும் தெரிந்தது. இதையடுத்து அவரை கைது செய்த மாரண்டஅள்ளி காவல்துறையினர் அவரிடமிருந்து 3கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Read MoreRead Less
Next Story