சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்ட நபர் கைது

பாலபடுதி காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில், சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்ட நபர் கைது செய்து 11 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்யப்பட்டது.

கரூர் மாவட்டம், பாலபடுதி காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில், சட்டவிரோதமாக மது விற்பனை நடப்பதாக மதுவிலக்கு காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் திலக் ஏப்ரல் 18ம் தேதி காலை 9 மணி அளவில், சேர்வைக்காரன் பட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டார்.

அப்போது அப்பகுதியில் செயல்படும் டாஸ்மாக் கடை அருகே சேர்வைக்காரன் பட்டி பகுதியைச் சேர்ந்த பழனிச்சாமி மகன் பாஸ்கர் வயது 44 என்பவர் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், விற்பனைக்காக வைத்திருந்த 11 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர். மேலும், இது தொடர்பாக பாஸ்கர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் பாலவிடுதி காவல்துறையினர்.

Tags

Next Story