அனுமதி இல்லாமல் மது விற்ற நபர் கைது

அனுமதி இல்லாமல் மது விற்ற நபர் கைது

காவல்துறை


குமாரபாளையத்தில் அனுமதி இல்லாமல் மது விற்ற நபர் கைது செய்யப்பட்டார்.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியில் அனுமதியில்லாமல் மது விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் தவமணி, எஸ்.ஐ. தங்கவடிவேலன் தலைமையிலான போலீசார் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது பஸ் ஸ்டாண்ட் பகுதியில் மது விற்பது தெரியவந்து, நேரில் சென்று பார்த்தனர். அங்கு ஒருவர் மது விற்பது கண்டு, கையும் களவுமாக பிடித்து, அவரிடமிருந்த நான்கு அரசு மது பானத்தை பறிமுதல் செய்தனர். போலீசார் விசாரணையில் அவர் பவானியை சேர்ந்த வேலு, 48, என்பது தெரியவந்தது. அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story