ஸ்கூட்டரில் மது பாட்டில்களை கடத்திய நபர் கைது

ஸ்கூட்டரில் மது பாட்டில்களை கடத்திய நபர் கைது

பாப்பாரப்பட்டி அருகே ஸ்கூட்டரில் 50 மது பாட்டில்கள் கடத்திய நபர் கைது செய்யப்பட்டு, ஸ்கூட்டர் மற்றும் மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.


பாப்பாரப்பட்டி அருகே ஸ்கூட்டரில் 50 மது பாட்டில்கள் கடத்திய நபர் கைது செய்யப்பட்டு, ஸ்கூட்டர் மற்றும் மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டம் மற்றும் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பாப்பாரப்பட்டி காவல் நிலைய காவலர்கள் நேற்று மாலை ரோந்து பணியில் ஈடுபட்டனர். வேலம்பட்டி பிரிவு ரோட்டில் ஸ்கூட்டரில் வந்த நபரை நிறுத்தி விசாரித்தனர். அவர் முன்னுக்கு பின் முரணாக பேசினார்.இதனால் சந்தேகம் அடைந்த காவலர்கள் ஸ்கூட்ட ரில் வைத்திருந்த மூட்டையை பிரித்து சோதனை செய்தனர்.

அதில் 50 மதுபாட்டில்கள் இருந்தது. இதுதொடர்பாக அந்த நபரிடம் காவலர்கள் விசாரணை நடத்தினர். அவர் வேலம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பழனிசாமி என்பதும் மதுபாட்டில்கள் கடத்தியதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை காவலர்கள் கைது செய்தனர். மேலும் மது பாட்டில்கள், ஸ்கூட்டரை காவலர்கள் பறிமுதல் செய்தனர்

Tags

Next Story