வாலிபரை கத்தியால் குத்தியவர் கைது - போலீசார் வழக்கு பதிவு

வாலிபரை கத்தியால் குத்தியவர் கைது - போலீசார் வழக்கு பதிவு

வாலிபரை கத்தியால் குத்தியவர் கைது - போலீசார் வழக்கு பதிவு

ஆரல்வாய்மொழி அருகே தகராறில் வாலிபரை கத்தியால் குத்தியவர் கைது.
கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி அருகே மாடன் நாடான் குடியிருப்பு பகுதி சுனில் (29), ஆவரைகுளம் பகுதியை சேர்ந்த சுதாகர் மற்றும் சிலர் ஆவரைகுளம் பகுதியில் சீட்டு விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது சுனிலுக்கும் சுதாகருக்கும் தகராறு ஏற்பட்ட நிலையில் சுனில் சுதாகரை தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 18ஆம் தேதி சுனில் ஆரல்வாய்மொழி குமாரபுரம் இணைப்புச் சாலை அருகே அமைந்துள்ள டாஸ்மாக் பாரில் மது அருந்திக் கொண்டிருந்த போது, சுதாகரின் தம்பி ராமகிருஷ்ணன் (24) அங்கு வந்து சுனிலிடம் என் அண்ணனை ஏன் அடித்தாய்? எனை கேட்டு தகராறு செய்துள்ளார். இதில் ராமகிருஷ்ணன் மற்றும் சுனில் இருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது. அப்போது சுனில் கத்தியால் ராமகிருஷ்ணனை குத்தியதுடன் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது தொடர்பாக ராமகிருஷ்ணன் ஆரல்வாய்மொழி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து தலை மறைவான சுனிலை தேடி வந்தனர். இதனிடையே நேற்று குமாரபுரம் சந்திப்பு அருகே வாகன சோதனையின் போது அப்பகுதியில் வந்த சுனிலை போலீசார் கைது செய்தனர்.

Tags

Next Story