ராஜாதோப்பு கோவிலில் நகை திருடிய நபர் கைது

ராஜா தோப்பு காமாட்சி அம்மன் கோவிலில் நகை திருட்டில் ஈடுபட்டவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு சட்டமன்ற தொகுதி மற்றும் வட்டத்துக்கு உட்பட்ட ராஜாதோப்பு பகுதியில் காமாட்சியம்மன் கோயிலில் கடந்த நவம்பர் மாதம் தங்க நகை, குத்து விளக்கு மற்றும் வெள்ளி நகைகள் உள்ளிட்ட பொருட்கள் திருட்டு போனது. இது குறித்து பூசாரி நாகன் பாலக்கோடு காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

அப்போது ஊமையன் கொட்டாய் கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவர் நகையை திருடிய இத தெரிய வந்து நேற்று அவரை கைது செய்தனர். மேலும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி தர்மபுரி சிறைச்சாலையில் அடைத்தனர்.

Tags

Next Story