பெண்ணை கம்பால் தாக்கியவர் கைது

பெண்ணை கம்பால் தாக்கியவர் கைது

பைல் படம்

திருச்செந்தூரில் தகராறு செய்து மூங்கில் கம்பால் பெண்ணை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் ஜீவா நகர் பகுதியில் உள்ள ஒரு காம்பவுண்டு வீட்டில் காசி பாண்டியன் மகன் மாரிமுத்து (29) என்பவரும் அதே காம்பவுண்டில் அவரது உறவினர் பெண் ஒருவரும் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 05.06.2024 அன்று மாரிமுத்து மதுபோதையில் மேற்படி பெண் வீட்டின் குடிநீர் இணைப்பு பைப்பை உடைத்துள்ளார்.

இதனையடுத்து மேற்படி பெண் மாரிமுத்துவை சத்தம் போட்டதையடுத்து ஆத்திரமடைந்த மாரிமுத்து மேற்படி பெண்ணிடம் தவறாக பேசி மூங்கில் கம்பால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் நேற்று அளித்த புகாரின் பேரில் திருச்செந்தூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சுந்தர் வழக்கு பதிவு செய்து மேற்படி மாரிமுத்துவை கைது செய்தார். மேலும் இதுகுறித்து திருச்செந்தூர் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story