சாலையை கடக்க முயன்றவர் பலி

சாலையை கடக்க முயன்றவர் பலி
X
அடையாளம் தெரியாத வாகனம் மோதி சாலையை கடக்க முயன்றவர் பலி
சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றவர் அடையாளம் தெரியாத வாகனம் மோதி பலியான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
செங்கல்பட்டு மாவட்டம்,மாமண்டூர் ஸ்ரீமாதா டிரஸ்ட் எதிரே, சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், நேற்று சென்னை மார்க்கத்தில் சாலையை கடக்க முயன்றபோது, அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. இதில், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்து விரைந்து வந்த படாளம் போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக, செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து, மாமண்டூர் கிராம நிர்வாக அலுவலர் கொடுத்த புகாரின்படி, போலீசார் வழக்கு பதிந்து உயிரிழந்தவர் யார் என, விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story